புங்கம் தரிசு நிலத்தின் தங்கம்
என்ன வளமில்லை இந்த திருநாட்டில் ?
எண்ணை வளம் இருக்குது புங்கமரக்காட்டில் !!
ஏன் கையை ஏந்த வேண்டும் வளைகுடா நாட்டில்??
நின்றால் நிழலுக்கு ஆகும்!
விழுந்தால் விறகுக்கு ஆகும்!
மலர்ந்தால் நறுந்தேன் நல்கும்!
பறவைக்கு விடுதிகள் ஆகும் ! - இனி
பாலைகள் சோலையாய் மாறும் !
பேரலைகளை தடுக்கும் அரணாகும்!
விதைகளால் வாகனங்கள் இயங்கும் !- இங்கே
ஆலைகளால் வேலைகள் பெருகும் !!
புண்ணாக்கில் அடுப்புகள் எரியும் !
தழைகளால் நிலம் வளமாகும்!
வறுமை நீங்கி வளமையாகும் !!
வல்லரசாக்குவோம் வா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக