வியாழன், 25 அக்டோபர், 2012

வீரிய ஆமணக்கு சாகுபடி

                   வீரிய ஆமணக்கு சாகுபடி 

                      கூடுதல் வருமானத்திற்கு

              கொட்டமுத்து (ஆமணக்கு)பயிரிடுவீர் 

குறைந்து வரும் மழை அளவு, கடும் மின்வெட்டு , ஆட்கள் பற்றாக்குறையால்
அல்லல் படும் உழவருக்கு வீரிய ஆமணக்கு சாகுபடி சாலச்சிறந்தது .காய்கறிகளை போல் இல்லாமல் சேமித்து வைத்து ,நல்ல விலை கிடைக்கும் போது விற்கலாம் .


manoj.slm1983@gmail.comஆடு, மாடுகள் விரும்பி உண்ணுவதில்லை , மேலும், காட்டு விலங்குகளான யானை மற்றும் ,குருவி ,மயில் போன்ற பறவைகளால்   பயிர்  சேதமாவதில்லை .


ஆமணக்கு கொட்டைகள் அழகு சாதனப் பொருள் உற்பத்திக்கும்சித்த மருத்துவத்தில் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.இதனால்ஆமணக்கு விதைக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

ஆமணக்கு செடியை பொறுத்தவரை கடும் வறட்சியிலும் பசுமையாக வளரக் கூடிய தன்மை கொண்டது.ஆமணக்கு பயிரிட்டால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

  • நிலக்கடலைகொள்ளுச் செடியில் ஊடுபயிராகவும்கலப்பு பயிராகவும் ஆமணக்கு சாகுபடி செய்யலாம்
  • ஒரு ஏக்கரில் ஆமணக்கு கலப்பு பயிராக சாகுபடி செய்து இருந்ததால் 200 முதல் 500 கிலோ வரை கிடைக்கும்.
  • ஒரு கிலோ ஆமணக்கு 40 ரூபாய் என விற்பனை செய்தால்ஏக்கருக்கு 8,000 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் லாபம் பெற முடியும்.




நாட்டு  இரகங்களை காட்டிலும் வீரிய ஆமணக்கு ரகம் அதிக விளைச்சலை
தரும்.  வீரிய ஆமணக்கு செடிகளில் காய்கள் வெடிக்காத தன்மையும்  மணிகள்  நடுத்தர பருமனாக உள்ளது,
 நடுத்தர உயரம் கொண்டதால் அறுவடை செய்வது எளிது . 



வெஸ்டர்ன்  வீரிய ஆமணக்கு 
*
 வீரிய ஒட்டு ஆமணக்கு செடிகள்  சாயாமலும் ,அதிக உரமேற்கும் திறனும் கொண்டது . மானாவரிக்கும் பாசன நீர் பற்றாக்குறை உள்ள பகுதிக்கும் மிகவும் ஏற்றது . இதன் சிறப்பம்சம் குறுகிய கால இடைவெளியில் அதிக குலைகள் தோன்றும் .

சாகுபடி முறைகள் 

இந்த ரகங்களை சாகுபடி செய்ய  அதிக வெப்பத்துடன் கூடிய குறைந்த ஈரப்பதம் ஏற்றது.தண்ணீர் தேங்கி நிற்காத கார அமிலத்தன்மை இல்லாத செம்மண் ,வண்டல் மண் நிலங்கள் மிகவும் ஏற்றது .

பட்டம் தப்பினால் நட்டம்  :                   

 ஆடிப்பட்டம் மானாவரி  விதைப்புக்கு உகந்தது 
               இறவைக்கு வைகாசி ,கார்த்திகை பட்டம் சிறந்தது 

விளையும் பயிர் முளையிலே  தெரியும் 

 இறவை வீரிய ஒட்டு ரகங்களுக்கு எக்டேருக்கு 5 கிலோவும், மானவரிக்கு  7.5 கிலோ விதை தேவைப்படும் .

விதைப்புக்கு முன் 10 மணி நேரம் ஊற வைத்து விதைத்தால் ,முளைப்புத்திறன் அதிகரிக்கும் . ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் (அ ) 4 கிராம் டிரைகோ டெர்மா (அ ) 10 கிராம் சூடோமோனஸ் ப்ளோரசன்ஸ் கலந்து நேர்த்தி செய்து அன்றே விதைக்க வேண்டும் .

இடைவெளி 

மானாவரிக்கு 120 * 90 செ .மீ  அதாவது வரிசைக்கு வரிசை 4அடி ,
                                                                                      செடிக்கு செடி 3 அடி .

இறவைக்கு  120*120  செ .மீ  அதாவது வரிசைக்கு வரிசை 4அடி ,
                                                                                      செடிக்கு செடி  4 அடி.

நீர்பாசனம் 

"  உயர் விளைச்சலுக்கு  உரம்  இடுவீர் "

ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள் (கிலோ)மானாவரிக்கு
தழை
மணி
சாம்பல்
29
15
15




மானாவரிக்குபரிந்துரைக்கப்பட்ட அளவு
(கிலோ / ஹெக்)


கிலோ / ஹெக்
தழைச்சத்து
29.00
யூரியா

62.93
மணிச்சத்து
15.00
சூப்பர் பாஸ்பேட்
93.75
சாம்பல் சத்து
15.00
பொட்டாஷ்
24.90






இறவைக்குபரிந்துரைக்கப்பட்ட அளவு
(கிலோ / ஹெக்)


கிலோ / ஹெக்
தழைச்சத்து
60.00
யூரியா

130.20
மணிச்சத்து
30.00
சூப்பர் பாஸ்பேட்
187.50
சாம்பல் சத்து
30.00
பொட்டாஷ்
49.80
















களை நிர்வாகம் : விதைத்த 20 மற்றும் 40 ஆம் நாட்களில் களைக் கொத்து கொண்டு களையெடுப்பது அவசியம்.

அறுவடை

பயிரின் வயதினைக் கணக்கில் கொண்ட அறுவடை மேற்கொள்ளவேண்டும்.
  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆமணக்கு முத்துக்கள் காய்ந்து இருந்தால் அறுவடை செய்யலாம்.
  • முற்றிய விதைக் காத்தை இதர கொத்துக்களைப் பாதிக்காதவாறு அறுவடை செய்யவும்.
  • விதைகளை நிழலில் குவித்து வைக்காமல் சூரிய ஒளியில் உலர்த்தவும்.
  • காய்ந்த கொத்தை குச்சி கொண்டு, அடித்து விதை முத்துக்களை பிரித்தெடுத்து, காற்றில் இட்டு தூசியை நீக்கவும் அல்லது விதைப் பிரித்தெடுக்கும் கருவி கொண்டு விதைகளைப் பிரித்தெடுக்கவும்.

 ஊடுபயிராக ஆமணக்கு 

* மக்காச் சோளத்தில் ஊடுபயிராக ஆமணக்கு பயிரிடுவதன் மூலம் புரொடினியா புழுக்களைக் கட்டுபடுத்த முடியும்

* புகையிலைப் பயிரில் ஊடுபயிராக ஆமணக்கு பயிரிடுவதன் மூலம் புகையிலை வெட்டு புழுக்களின் சேதம் கட்டுப்படுத்தப்படுகின்றன

* நிலக்கடலையில் ஆமணக்கு செடிகளை வயல் ஓரங்களில் 2 மீட்டருக்கு ஒரு செடி வீதம் நடவு செய்வதால் புரோடீனியா புழுக்களை கவர்ந்து அழிக்கலாம்.

  




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக